இவரல்லவா கலெக்டர்!

இவரல்லவா கலெக்டர்!
இவரல்லவா கலெக்டர்!

  ஜி.கே.சேகரன்,

 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  -அவர்களுடன்  உணவு அருந்தினார்.

   திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று வருகிறது.

  இந்த முகாமில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 

  இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சுமார் 164 பயனாளிகளுக்கு தேசிய தேசிய அடையாள அட்டை வழங்கி சுமார் 10,26,000ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

  அதன் பிறகு மதிய உணவு திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் ஏற்பாடு செய்திருந்தது. 

  மதிய உணவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிமாறிவிட்டு தானும் அவர்களுடன் சமாபந்தியில் அமர்ந்து உணவு அருந்தினார். இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.