கரூர் சம்பவத்தில் அசரா கார்க் விசாரிக்க கூடாது என்ற த.வெ.கஅவரையே உளவுத்துறை ஐஜியாக நியமனம்!

கரூர் சம்பவத்தில் அசரா கார்க் விசாரிக்க கூடாது என்ற த.வெ.கஅவரையே உளவுத்துறை ஐஜியாக நியமனம்!

ம.பா.கெஜராஜ்,

தமிழக வெற்றி கழகத்தின் ஜோசப் விஜய் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது 41 பேர் இறந்தனர், அந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அஸ்ரா கார்க் தற்பொழுது தமிழக உளவுத்துறை பயிற்சியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

யார் இவர்?

கண்​டிப்​பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க், பஞ்​சாப் மாநிலம் பாட்​டி​யாலா​வைச் சேர்ந்​தவர்.

2004-ல் நேரடி ஐபிஎஸ் ஆக தேர்​வான இவர், தமிழகப் பிரிவு அதி​காரி​யாக பணி​யமர்த்​தப்​பட்​டார். பி.இ. பட்​டம் பெற்றுள்ள அஸ்ரா கார்க் தமிழ், பஞ்​சாபி, இந்​தி, ஆங்கிலத்தில் சரள​மாக பேசக்​கூடிய​வர்.

 அப்போதைய வேலூர் மாவட்​டம் திருப்​பத்​தூரில் உதவி எஸ்​.பி.யாக பணியைத் தொடங்கி நெல்​லை, மதுரை, தரு​மபுரி மாவட்ட எஸ்​பி​யாக பணியாற்றி மக்​களுக்கு ஆதர​வாக பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டார்.

பின்​னர் பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணி​யாற்​றி​னார்.

அதைத் தொடர்ந்து மீண்​டும் தமிழகம் திரும்​பிய அவர், தென்​மண்டல ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் வட சென்னை காவல் கூடுதல் ஆணை​ய​ராகப் பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.​யாக பணி​யாற்​றிய நிலை​யில், தற்​போது உளவுத்​ துறை ஐ.ஜி. ஆகி​யுள்​ளார்.

தென் மண்டல ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் பணி​யாற்​றிய​போது போதைப் பொருள் உற்​பத்தி மற்​றும் சட்ட விரோதக் கடத்​தலை ஒழிப்​ப​தில் தீவிரம் காட்​டி​னார்.

இந்த சீரிய பணியை அங்​கீகரித்து தமிழக அரசு 2023-ம் ஆண்டு சுதந்திர தின விழா​வில் அவருக்கு சிறப்​புப் பதக்​கம் வழங்கி கவுரவித்தது.

கரூரில் விஜய் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில், அதுபற்றி விசா​ரிக்க அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

ஆனால், நீதி​மன்ற உத்​தர​வுக்கு எத​ராக சிபிஐ விசா​ரணை​யைக் கோரியது தவெக.

தற்போது தவெக அரசு பதவி​யேற்ற நிலை​யில், அஸ்ரா கார்க் உளவுத் ​துறை ஐ.ஜி.​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.