காவலர் முதல் ஆய்வாளர் வரை இலவசமாக பயணிக்கலாம்! முதல்வர் அறிவிப்பு!

காவலர் முதல் ஆய்வாளர் வரை இலவசமாக பயணிக்கலாம்! முதல்வர் அறிவிப்பு!

  ம.பா.கெஜராஜ்,

  காவலர்கள் துவங்கி ஆய்வாளர்கள் வரை விசேஷ அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

  காவல்துறை மானிய கோரிக்கை இன்று சட்ட பேரவையில் கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அவற்றின் விவரம் வருமாறு,

 *காவல்துறையினர் மீது நிலுவையில் உள்ள சிறு தண்டனைகள் கைவிடப்படும்.

  *காவலர் முதல் ஆய்வாளர் வரை தாங்கள் பணி புரியும் மாவட்டங்களுக்குள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக செல்ல நவீன அடையாள அட்டை கொடுக்கப்படும்.

  *தீவிர குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தீவிர குற்றவாளிகள்  தடுப்புப்பிரிவு ஏற்படுத்தப்படும் .

  *சைபர் குற்றங்களை புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கும் வகையில் , மாநில இணையதளக் குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் உருவாக்கப்படும் .

  *சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகளை தடுக்கும் விதமாக , சென்னை காவல்துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு உருவாக்கப்படும்.

 *மீண்டும் காவல் ஆணையம் அமைக்கப்படும் 

 *கடலோர காவல் படையினருடன் இணைந்து பணி புரிய , 1000 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர் .

 *சமூகத்திலும் , பொருளாதாரத்திலும் பின் தங்கிய சிறார் , சிறுமிகள் தவறான வழியில் செல்வதை தடுக்கவும் , குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் 51 சிறார் மன்றங்கள் அமைக்கப்படும் .

 *பொதுமக்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் புகார் அளிக்கலாம்.

 *சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுற்றுலா காவல்துறை உருவாக்கப்படும்

 * டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படும் .

 * காவலர்களுக்கான இடர்படி ரூ .800 - ல் இருந்து ரூ .1,000 ஆக உயர்த்தி தரப்படும் .

 * பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

 *காவல்துறையினரின் பிரச்சனைகளை கேட்டு அதற்கு தீர்வு கொடுக்க சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும்.