பெண் இன்ஸ்பெக்டர் காப்பாற்றிய இளைஞர் இறந்தார்!

க.முகில்,
சென்னை டிபி சத்திரம் மாநகராட்சி கல்லறையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதயா என்கிற இளைஞரை டிபி சத்திரம் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த உதயாவை ராஜேஸ்வரி தம் தோளில் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இந்நிலையில், உதயா என்ற அந்த நபர் இன்று கே.எம்.சி. மருத்துவமனையில் இறந்து விட்டார்.
இந்த தகவலை கேட்டு டிபி சத்திரம் காவல் நிலையத்தார் மிகவும் வருந்தினர்.