கொடிநாள் வசூல் ரூ.44. 40 லட்சம் இலக்கு!

கு.அசோக்,
கொடிநாள் வசூலை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் இந்த ஆண்டு இலக்கு ரூ.44. 40 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் முன்னாள் படைவீரர் நலத்துறையில் சார்பில் கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தனது பங்களிப்பை செலுத்தி ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நடந்த நிதி வசூலில், நேதாஜி மார்கெட் வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று நிதி வசூலிக்கப்பட்டது.
இதில் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.49.75 லட்சம் வசூலிக்கப்பட்டது இந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு கொடி நாள் வசூல் இலக்கு ரூ.44. 40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கிடைக்கும் நிதியானது முன்னாள் படைவீரர்கள் ஊனமுற்றவர்கள் போரில் உயிர் நீத்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 1499 நபர்களுக்கு ரூ.4. 69 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடி நாள் ஊர்வலத்தில் பயிற்சி ஆட்சியர் செல்வி ஐஸ்வர்யா இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, முன்னாள் படைவீரர் நல அலுவலர் செந்தில்குமார், வேலூர் வட்டாச்சியர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்