பெண் அலுவலரின் சொகுசுக் கார் அலம்பல்!

R.ரவிகாலேப்,
லஞ்ச அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நாகர்கோவில் மாநகராட்சி சி.பி.ஐ.எம்.எல்., (விடுதலை)கட்சியின் செயலாளர் வே.அய்யப்பன் கோரிக்கை விடுத்தார்.
இதுதான் அவரது கோரிக்கை,
கன்னியாகுமரி மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள
நகர் புற ஊரகமைப்பு துறையின் மூலம் மனைகளை வரம்புமுறையை செய்து தர ஒரு பைல்-க்கு ரூபாய் 5 லட்சம், 10 லட்சம் என லஞ்சம் பணம் வசூல் செய்யும் சர்வேயர் மில்டரி ராஜன், நாகேஷ்வரி, உதவி இயக்குநர் மோகன் ஆகியோரின் வசூல் வேட்டை அனல் பறக்கிறது.
இது குறித்து கேட்டால், மேல் அதிகாரிகளுக்கும் நீங்களா கொடுக்க போகீறிர்கள்,
நாங்கள்தான் வசூல் செய்துகொடுக்க வேண்டும் என்று லஞ்ச அலுவலர்கள் சொல்கிறார்கள்.
இதில் சூப்பரைஸ்சர் திருமதி,நாகேஷ்வரி மேடம் 18 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் (சட்டவிரோதமாக லஞ்சம் பணம் வாங்கி குவிக்கும் டிப்பார்ட்மென்ட்) உள்ளார்.
மேற்படி மனைகளை வரம்புமுறைபடுத்த வருபவர்களிடம் விலை உயர்ந்த சொகுசு கார்களின் தான் இவரது பயணம் தொடர்கிறது.
சொகுசு கார் அனுப்பவில்லை என்றால் பைல் மூவ் ஆகாதாம்.
மேற்படி அரசாங்க அதிகாரிகள் எந்த ஒரு விலை உயர்ந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட துறையின் அனுமதி பெற வேண்டும்.
மேற்படி அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பின்பற்றாமல் முறையாக அனுமதி வாங்காமல் நகைகள், மனைகள் வீடுகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.
அடுத்தபடியாக மில்டரி ராஜன் என்கிற சர்வேயரின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
மேலும் வீட்டுமனைக்கு பெண்கள் வந்தால் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், செக்ஸ் பாட்டுப்பாடுவதும் இவரது தொடர்கதையாம். இவரின் அந்தரங்க நடவடிக்கையால் பெண்கள் அந்த அரசு அலுவலகத்திற்கு போக தயங்குகின்றனர்.
திருவண்ணாமலையில் விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கி தற்போது குமரி மாவட்டத்திலும் இவரது மெகா வசூல் ஆட்டம் தொடர்கிறது.
இதனால் என்னை எங்கு மாற்றினாலும் பரவாயில்லை எனக்கு வேலூர் தான் சொந்த ஊர், அதனால எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்.
அதே போல் தெனாவட்டாக பேசும் உதவி இயக்குநர் மோகனின் நடவடிக்கையால் குமரி மாவட்டத்தில் உள்ள நடுத்தர பொதுமக்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள்.
மேற்படி அதிகாரிகளின் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து,
தமிழக முதல்வர் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.