ரூ.16,71,260 மதிப்பீட்டில் 87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:- வேலூர் ஆட்சியர் வழங்கினார்!

ரூ.16,71,260 மதிப்பீட்டில் 87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:- வேலூர் ஆட்சியர் வழங்கினார்!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சேங்குன்றம் கிராமம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் மனுநீதி நாள் முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ரூ.16,71,260 மதிப்பீட்டில் 87 பயனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா, உட்பிரிவு, பட்டா பெயர் திருத்தம், வாரிசு சான்று, பட்டா மாற்றம், ஆக்ரமணம் அகற்றல் போன்றவற்றிற்கு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றார்.

  மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றோர் உதவித் தொகை போன்றவற்றிற்கு கோரிக்கை மனுக்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் சலவைப்பெட்டி, தையல் இயந்திரம், இலவச போர்வெல் போன்றவற்றிற்கு  கோரிக்கை மனுக்களும்,  சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றோர் உதவித்  தொகை போன்றவற்றிற்கு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் சலவைப்பெட்டி, தையல் இயந்திரம், இலவச போர்வெல் போன்றவற்றிற்கு கோரிக்கை மனுக்களும்,  அரசு கான்கீரிட் தொகுப்பு வீடு, கறவை மாடு, ஆடு/மாடு, கொட்டகை, அரசு தொகுப்பு வீடு, சாலை வசதி போன்றவற்றிற்கு கோரிக்கை மனுக்களும்,  மாவட்ட வேலை வாய்ப்பு துறையின் கீழ் அரசு வேலை வாய்ப்பு கோரி மனுக்களும், வனத்துறையின் கீழ் வனப்பகுதி சுற்றுபுறத்தில் பாதுகாப்பு பாதுகாப்பு வேலி அமைக்க கோரிக்கை மனுக்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் அரசு வங்கி கடன் கோரி மனுக்கள் என ஆக மொத்தம் 146 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன.

  இதனைத் தொடர்ந்து, குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் வீட்டுமனை பட்டா ரூ.11,31,000 மதிப்பீட்டில் 13 பயனாளிகளுக்கும், பட்டா மாற்றம் 12 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 2 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவி தொகை ரூ.2,52,000 மதிப்பீட்டில் 21 பயனாளிகளுக்கும், விதவை உதவி தொகை ரூ.96,000 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி உதவி தொகை ரூ.12,000 மதிப்பீட்டில் 1 பயனாளிக்கும், கணவனால் கைவிடப்பட்டவர் உதவித் தொகை ரூ.12000 மதிப்பீட்டில் 1 பயனாளிக்கும்,  வேளாண்மை துறையின் கீழ் மழைதூவான் ரூ.75,930 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கும், விசை தெளிப்பான் ரூ.4,380 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கும், மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் குடும்ப அட்டை 6 பயனாளிக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலம் சலவை பெட்டி ரூ.19200 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கும், தையல் இயந்திரம் ரூ.50,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மூன்று சக்கர சைக்கிள் ரூ.8,750 மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறையின் சார்பாக தாய் சேய் நல பெட்டகம் ரூ.10,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறையின் சார்பாக பப்பாளி செடி, இயற்கை தானிய பெட்டகம், கத்திரி செடி, முருங்கை செடி, ஞிக்ஷீவீஜீ பிமீணீபீ ஹிஸீவீt  தலா 1  பயனாளிக்கும் ஆக மொத்தம் ரூ.16,71,260 மதிப்பீட்டில்  87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் திரு.நெடுமாறன், குடியாத்தம் வட்டாட்சியர் திருமதி.லலிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.