170 போலிசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி!

170 போலிசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

wish you the happy ramalan

 தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை (பொன்விழா ஆண்டு) கொண்டாடும் வகையில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்ற போது மேற்கு மண்டல ஐ.ஜி பரிசு வழங்கி பாராட்டினார்.

  தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்பேரில் தமிழக காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்த பொன்விழா ஆண்டினை கொண்டாடும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., அவர்களின் தலைமையில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.விஜயகுமார், இ.கா.ப., அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரை கோவை மாவட்டம் மதுக்கரை மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது.

 சுமார் 170 பேர் கலந்து கொண்ட மேற்படி துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 இப்போட்டியில் வெற்றி பெற்ற காவலர்கள் பெயர்கள் பின்வருமாறு

கார்பன் பிரிவு

துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த திருமதி.நந்தினி முதலிடமும், கோவை மாநகர பி2 காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வி.சௌமியா  2-ம் இடமும், கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த செல்வி.கனிமொழி , திருப்பூர் மாவட்ட ஆயுதப் பணியைச் சேர்ந்த திருமதி. மாணிக்கதாய் மற்றும் செல்வி.கௌசல்யா ஆகிய மூவரும் 3-ம் இடம் பிடித்தனர்.

 பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி.கௌசல்யா முதலிடமும், கோவை மாநகர பெண் காவலர் செல்வி.சுகன்யா 2-ம் இடமும், கோவை மாவட்டம் தலைமை பெண் காவலர் திருமதி.சரஸ்வதி 3-ம் இடமும் பிடித்தனர்.

இன்சஸ் பிரிவு

துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை இருப்பு பாதை காவல் பிரிவில் பணிபுரியும் திருமதி.ரூபாவதி மற்றும் கோவை மாநகர குனியமுத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த திருமதி.ஞானப்பிரியா ஆகிய இருவரும் முதலிடமும், கோவை மாநகர காட்டூர் காவல் நிலையத்தை சேர்ந்த செல்வி.சண்முகப்பிரியா 2-ம் இடமும், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் காவலர் திருமதி.சாந்தி  3-ம் இடமும் பிடித்தனர்.