சைபர் கிரைமில் புகார் அளிக்க லிங்க்:- எஸ்.பி.அறிவுறை!!

ம.பா.கெஜராஜ்,
சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிப்பதற்கான எளிய வழி என்ன என்பது குறித்து வேலூர் எஸ்.பி.விளக்கினார்.
இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், இன்று 07.06.2022 வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும், Cyber Cell தொடங்கப்பட்டது.
இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் (Cyber Crime supporting Officer (SSI - 1, Gr.I - 1, PC - 1) ஆகியோர்கள் கொண்ட 51 காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகார் அளிப்பது தொடர்பான சிறப்பு வகுப்பு மற்றும் பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இவர்கள் இணைய குற்றம் தொடர்பாக காவல் நிலையங்களுக்கு அணுகும் பொதுமக்களை உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டிய *National Cyber Crime Reporting portal (NCRP)என்ற இணையதளத்தில் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் உடன் புகார் பதிவு செய்யவும், பணம் இழப்பு தொடர்பான புகார்களை 1930 என்ற சைபர்கிரைம் Helpline number க்கு தொடர்பு கொண்டு புகார் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றினார்.
அதில் ‘சைபர் கிரைம் (இணையவழி குற்றங்கள்) பற்றி பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை எனவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் எங்கு சென்று புகார் தெரிவிக்கவேண்டும் என போதுமான தகவல் தெரியாததாலும், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பொதுமக்களின் சிரமத்தை போக்கவேண்டி ஒவ்வொரு காவல் நிலையங்களில் தனியாக Cyber crime cell தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் பேரில், தற்சமயம் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தனியாக cyber Crime cell தொடங்கப்பட்டள்ளது. மேலும் சைபர் கிரைம் புகார் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரை பெற்று உடனடியாக மனு ரசீது ( CSR ) வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களுக்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படவேண்டும் என சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. C.R.பூபதி ராஜன், DCB (I/C) CCW மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. அபர்ணா, CCW மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.