திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு தொடங்கியது!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு தொடங்கியது மாவட்டம் முழுவதும் 30,000 மேற்பட்ட கடைகள் மற்றும் 8000க்கும் மேற்பட்ட உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரியில் உரிய தண்ணீரை திறந்து விட மறக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், தண்ணீர் திறந்து விட ஒன்றிய அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30,000 மேற்பட்ட கடைகள் மற்றும் 8000க்கும் மேற்பட்ட உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் , இன்று காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணி முதல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30,000 மேற்பட்ட கடைகள் மற்றும் 8000க்கும் மேற்பட்ட உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், ஆதரவுடன் போராட்டம் நடைபெற்று வருகிறது.