நலத்திட்ட உதவிகள் வாங்குவதில் பெண்கள் இடையே தள்ளு முள்ளு !

நலத்திட்ட உதவிகள் வாங்குவதில் பெண்கள் இடையே தள்ளு முள்ளு !

பா.சுரேஷ்,

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு - திராவிட மாடல் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 21வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது.

 செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் திராவிட மாடல் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமானது அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழிகாட்டுதலின்பேரில் நேற்று முன்தினம் 21வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தலைமையில், நகர மன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனை பற்றிய விளக்கங்கள் மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. உடன் 21வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயந்திஜெகன், நகர மன்ற கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், திமுக பெண்கள் பாசறை, திமுக இளைஞர் அணி, திமுக மாணவர் அணி,திமுக ஐ.டி.விங் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.