தல தளபதி ரசிகர்கள் மோதல் தீரவே தீராதா? மன்னிப்பு கேட்ட ரசிகர்!

தல தளபதி ரசிகர்கள் மோதல் தீரவே தீராதா? மன்னிப்பு கேட்ட ரசிகர்!

 உ.சசிகுமார்,

 பெரிய பேனர் டடிகர்கள் ஒருவருக்கொருவர் நட்பில் இருந்தாலும் கூட அவர்களின் ரசிகள் ஒவ்வொறு படம் ரிலீஸ் ஆகும் போது மோதிக்கொண்டு செய்திகளில் இடம் பிடிக்கிறார்கள்.

 அந்த வகையில்  நடிகர் விஜய்யின் கில்லி படம் ரீமேக் ஆகி திரையிடப்பட்டிருக்கிறது.  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த ரீ ரிலீஸ்.

 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி 20 ஆண்டுகள் கழித்து வெளியான போதிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை  குவித்து வருகிறது.

 அப்படியிருக்க மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் அவரது நடிப்பில் 2001-இல் வெளியான தீனா திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. முதல் நாள் காட்சி என்பதால் திரையரங்குகளுக்கு அஜித் ரசிகர்கள் வந்தனர்.

   அப்போது தீனாவும், கில்லியும் ஒன்றாக ஓடும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டனர். குறிப்பாக, ரோகணி, காசி திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர்.

   சென்னை கே.கே. நகரில் உள்ள காசி திரையரங்கில் கில்லி பேனரை அஜித் ரசிகர் கிழித்தெறிந்தார். இந்த வீடியோ வெளியாகி விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் கில்லி பேனரை கிழித்த எபினேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

   முன்னதாக, கில்லி பேனரை கிழித்ததற்காக எபினேஷ் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. அதில் பேசும் எபினேஷ், "காலை 11 மணிக்கு பசங்களோட காசி தியேட்டருக்கு தீனா படம் பார்க்க போயிருந்தேன். அப்போ அந்த தியேட்டரில் கில்லி பேனர் இருந்தது. பசங்க கூட என்ஜாய் பண்றதுக்காக கில்லி பேனரை பைக் சாவியால் கிழிச்சிட்டேன்.

   இதற்காக அண்ணன் விஜய் அவர்களிடமும், தமிழக வெற்றி கழக நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோல இனி செய்ய மாட்டேன் என்பதையும் தலை வணங்கி தெரிவித்துக் கொள்வதாக எபினேஷ் கூறினார்.