சிங்கப் பெண்களின் சிங்காரப்பணிகள்!

ஜி.குலசேகரன்,

நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்த பிஞ்சுகளை, குழந்தைகள் நல குழு கமிட்டியினரிடம் ஒப்படைத்த சிங்கபெண் அதிரடி படையினர்! இதுவரை ஆதார்கார்டு கூட இல்லாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன். இவர் பனங்காட்டேரி பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு தெய்வானை (13) கிருஷ்ணன் (11), ஆறுமுகம் (6), சாமுண்டீஸ்வரி (5) ஈஸ்வரி (4), என மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

  வறுமையின் காரணமாக தெய்வானை, கிருஷ்ணன், ஆகிய இரு பிள்ளைகளும் படிப்பை இடையில் நிறுத்தி இதுவரை பள்ளிக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் வெங்கடேசன் குடிபோதைக்கு அடிமையானதாக தெரிகிறது.

 இந்த நிலையில் பூங்கொடி தனது 5 பிள்ளைகளுடன் தங்கராஜ் என்பவருடைய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

 அப்போது அந்த வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கப்பென் அதிரடி உதவி காவல் ஆய்வாளர் கவிதா பிஞ்சு குழந்தைகள் வேலை செய்வதை கண்டறிந்து அவரை அழைத்து விசாரித்தார்.

  அப்போது பள்ளிக்குச் செல்லாமல் வேலை செய்து வந்ததும் மேலும் இதுவரை ஆதார் கார்டு மற்றும் முக்கிய ஆவணங்கள் எதுவும் கையில் இல்லாத காரணத்தால் பள்ளியில் சேர்த்த முடிய வில்லை எனவும் தெரியவந்தது.   

   அதன் பின்னர் அங்கிருந்து அழைத்து வந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல கமிட்டினரிடம் ஒப்படைத்தார்.

  குழந்தைகளை விசாரித்த கமிட்டியினர் வாணியம்பாடி பகுதியில் உள்ள சிஎம்எஸ் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் ஆதார் கார்டு மற்றும் விக்கி ஆவணங்களை தயார் செய்வது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.