திருப்பத்தூர் கலெக்டரின் அதிரடி நடவடிக்கை!

நூ.அ.தபு,
வாணியம்பாடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு மாணவர்களை உடனடியாக வேற இடத்திற்கு மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் சுமார் 193 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கும் வகையில் இரண்டு வகுப்பறை மட்டும் நல்ல நிலையில் உள்ளது. மீதமுள்ள வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி அருகில் அரசு பள்ளி மாணவர்கள் சென்ற மிதிவண்டிகள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்து மிக அருகிலுள்ள நடுநிலைப் பள்ளியை பார்வையிட வலியுறுத்தினர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது பள்ளியின் நிலைமை அறிந்து உடனடியாக வளையம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை தேர்வு செய்து தற்காலிகமாக பள்ளி இயங்க நடவடிக்கை மேற்கொண்டும், அவர் கண்முன்னே அனைத்து மாணவர்களுக்கு புதிய கட்டிடத்திற்கு வேண்கள் மூலமாக அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.