மறைந்த நிஜ சமூக சேவகர் பி.எஸ்.எஸ்.க்கு மோட்ச தீபம்!

மறைந்த நிஜ சமூக சேவகர் பி.எஸ்.எஸ்.க்கு மோட்ச தீபம்!

 கு.அசோக்,

   நீர்நிலைகளின் அருகே மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கூடாது என இந்தியாவில் முதல் முறையாக தடை பெற்ற சமூக சேவகர் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் திரு.பி.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் மறைவுக்கு வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.

 சமூக சேவகரான பி.எஸ்.சுப்பிரமணியம் குறித்தும் அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் மூத்த செய்தியாளர்களில் ஒருவரான ஜி.குலசேகரன் அவர்கள் தெரிவிக்கையில்,

   வேலூர்  மாவட்டம்,வேலூரை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம். இவர் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகள் மாசு அடைவதை தடுக்க கோரி 1991- ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடுத்து நாட்டிலேயே உள்ள அனைத்து நதிகளின் ஓரங்களிலும் ஒரு கிலோ மீட்டர்துரத்திற்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை தொடங்க கூடாது என உத்தரவினை பெற்றவர்.

  அத்துடன் வேலூர் மாவட்டத்திலும் மாசு ஏற்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகளை நீதிமன்ற உத்தரவின் படி மூட காரணமானவர்.

  தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் மாசு அடைவதை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் அத்துடன் நாட்டில் தோல் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திரகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டுமென நீதிமன்ற உத்தரவை பெற காரணமாக இருந்தவர் பி.எஸ்.சுப்பிரமணியம்.

   இவர் நூற்றுக்கணக்கான பொது நல வழக்குகளை தொடுத்து மக்களுக்காக பல்வேறு உத்தரவுகளை தனி மனிதராக பெற்று தந்தவர்.

  வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் சாமி இல்லாத கோவிலாக இருந்த போது பொதுமக்கள் அதனுள் சாமியை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவுடன் அதனை அப்புறப்படுத்த மத்திய அரசு முயன்ற போது அப்போது நீதிமன்றத்தை நாடி கோவில் தொடர்ந்து செயல்படவும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தடை உத்தரவை பெற்றவர்.

  அரசியல் பின்புலத்தை தவிர்த்து வந்த அவர், பத்மஸ்ரீ விருது கிடைக்க இருந்த நிலையிலிருந்து விலகிச்சென்றார். இவரை தமிழக முதல்வர்கள் பலர் பாராட்டி உள்ளனர்.

   வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்து சென்னையில் அவரது மனைவியுடன் செட்டில் ஆகிவிட்டார்.

 இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மூச்சு திணறலில் அவதிப்பட்டு வந்த அவர் 26.02.2023 ஆம் தேதி காலை இறந்தார்.

  இவரின் மறைவை ஒட்டி ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் மண்டபத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது ஜலகண்டீஸ்வரர் தருமஸ்தாபன செயலாளர் சுரேஷ் மோட்ச தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடுகளை செய்தார்.

  நாட்டில் சத்தமில்லாமல் விளம்பரமில்லாமல் பல சமூகத்தில் நடந்து வரும் அவலங்களை நீதிமன்றம் மூலமே தீர்வு கண்ட சமூக ஆர்வலர் மூத்த வழக்கறிஞருமான அவரின் மறைவு அவரது வீட்டாருக்கு மட்டுமல்ல, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் குலசேகரன்,