மனுதாரர்களுக்கு இருக்கை கொடுத்து அதிகாரிகளை விரட்டிய கலெக்டர்!

மனுதாரர்களுக்கு இருக்கை கொடுத்து அதிகாரிகளை விரட்டிய கலெக்டர்!

கு. அசோக்

திருப்பத்தூரில் புதிதாக பொறுப்பேற்று வந்த முதல் நாள்  மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிளிடம் அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்! மனுதாரர்களை அழைத்து நாற்காலி அமர வைத்து மனுக்களை பெற்ற சம்பவத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி!

   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சில தினங்களுக்கு முன்பு பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  மேலும் பாஸ்கரன் பாண்டியன் பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களுக்காக  பல்வேறு அதிரடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

   இந்த நிலையில்  திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வழக்கம்போல் இருக்கும் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் குறை தீர்ப்பு  கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர்.

   அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் நாள் மக்களுக்கு குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த அனைத்து அதிகாரிகளையும் எழுந்து மறுபக்கம் அமரும் படியும் மேலும் வெளியில் மனு கொடுக்க காத்திருந்த மனுதாரர்கள் அழைத்து அதிகாரிகள் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர வைத்து பேசினார்.

   அதன் பின்னர் மனுதாரர்கள் இருக்கும் இடத்திற்கு  அதிகாரிகளை அனுப்பி அவர்கள் எந்த மனுக்களை கொண்டு வந்தார்கள் எந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த துறை அதிகாரிகள் என்னிடம் வந்து மனுதாரருடன் மனுக்களை கொடுங்கள் என அதிரடி காட்டினார்.

   இதனால் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

   மேலும் மணி கணக்கில் காத்திருந்த மனுக்களை கொடுத்த மனுதாரர்கள் மத்தியில் வந்த முதல் கூட்டத்தில் அமர வைத்து மனுக்களை பெற்ற சம்பவம் பொதுமக்களின் அன்பையும் பாராட்டுதல்களும் பெற்றார்.