லலிதா ஜுவல்லரியின் வேலூர் கிளை உதயம்:- நறுவீ மருத்துவமனை நிர்வாகி ஜி.வி.சம்பத் திறந்து வைத்தார்!

ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம், வேலூரில் லலிதா ஜுவ்வல்லரியின் 53 ஆவது விற்பனை மையம் அண்ணா சாலையில் புதியதாக தொடங்கப்பட்டது. இதனை நறுவீ மருத்துவமனை நிறுவனர் சம்பத், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். லலிதா ஜுவ்வல்லரி உரிமையாளர் கிரண்குமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர்.
பின்னர் லலிதா ஜுவ்வலரி நிர்வாக இயக்குநர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைக்கு 53 ஆவது கடை திறக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவிலும் லலிதா ஜுவ்வல்லரியை திறக்கவுள்ளோம்.
நான் சொல்வது போல் காசு சும்மா வராது, எங்கள் கடையின் விலையை மற்ற கடையின் விற்பனை ஒப்பிட்டு எங்கு விலை சரியாக குறைவாக இருக்கிறதோ அங்கு வாங்குகள் நீங்கள் தங்கத்தை வாங்கி வைத்தால் அது எப்போதும் உங்களுக்கு லாபம் தான் என கூறினார்.
இந்த புதிய கடை திறக்கப்பட்டது இதில் வெள்ளி மற்றும் தங்கநகைகள் விற்பனை செய்யபடுகிறது.