தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களைப் பிரதமர் திறந்துவைத்தார்!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களைப் பிரதமர் திறந்துவைத்தார்!

க.பாலகுரு,

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

  பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவையாகும். மேலும் நாடு முழுவதும் மத்திய நிதியுதவியுடன் செயல்படும் உயர்கல்வி நிறுவன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ரூ. 12,744.39 கோடி மதிப்பில் பிரதமர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்பணித்தார்.

 அதில்,  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கைலாஷ் சத்யார்த்தி கல்விக் கட்டடம், கோதாவரி பெண்கள் விடுதி (300- படுக்கைகள்)மகாநதி ஆண்கள் விடுதி (300-படுக்கைகள்) ஆகிய அதிநவீன உள்கட்டமைப்புகளைக் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

  நாடு முழுவதும் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், கல்வி மற்றும் உறைவிட  வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததை இந்த விழா உறுதி செய்துள்ளது.

   திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன், பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன், நிதி அலுவலர் ஜி.ஆர்.கிரிதரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் முனைவர் ஆர்.பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   ரூ.95.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று கட்டங்களும் உயர்கல்வி நிதியளிப்பு முகமையின் நிதியுதவியுடன் மத்தியப் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது.  புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கட்டடங்களில் மின்தூக்கி, வலைத்தள இணைப்புமேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

  ரூ. 31.94 கோடி செலவில் 7092 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கைலாஷ் சத்யார்த்தி கல்விக் கட்டடம், இசைத்துறை, புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதத்துறை, தோட்டக்கலைத்துறை, தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத் துறை, நுண்ணுயிரியல் துறை, உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய ஆறு துறைகளை உள்ளடக்கியது.

   கோதாவரி பெண்கள் விடுதி 300 படுக்கைகளுடன் 8117 சதுர மீட்டர், ரூ. 31.63 கோடி செலவிலும், மகாநதி ஆண்கள் விடுதி 300 படுக்கைகளுடன் 8117 சதுர மீட்டர், 31.63 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த நவீன வசதிகள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றன.

 இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (சியுடிஎன்) 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 13 புலங்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட 28 துறைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான கல்வி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

  தேசியத் தேர்வு முகமை  நடத்தும்  ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் வழக்கமான முதுகலைப் படிப்புகளுக்கானப் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2,500 மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மத்தியப் பல்கலைக்கழகம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

   மேலும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சித் திட்டங்களையும் கொண்டுள்ளது. என் ஐ. ஆ. எப் 2023 இல் 89 வது இடத்தைப் பிடித்தது மற்றும்¬ ஐ.ஐ.ஆர்.எப்  பல்கலைக்கழகத் தரவரிசை 2023 இல் 12 வது இடத்தைப் பெற்றதன் மூலம், தரமானக் கல்வியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டில் பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது.

ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கானப் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு அதன் அதிநவீன வசதிகளான ஆராய்ச்சி மையங்கள், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றில் பிரதிபலிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஆறு துறைகள்  அங்கீகாரங்களைப்பெற்றுள்ளன.

  மேலும் அங்கீகாரங்கள் உள்ளன, இது அறிவை மேம்படுத்துவதற்கும் ஆராய்ச்சியை வளர்ப்பதற்கும் நிறுவனத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் குறுகிய காலத்தில்,  62 இன் 'லீ' குறியீட்டை எட்டியுள்ளது, இது பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் செய்த ஆராய்ச்சிப் பங்களிப்புகளுக்கு சான்றாகும். பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடுவதன் மூலம் கல்விசார் ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.