தமிழன் ராஜா,
இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தேங்கியிருந்த தண்ணிரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மாமியார் நீச்சலடித்து உயிர் தப்பினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தொடையூர் அருகில் இருக்கும் ரயில்வே சுரங்க வழியாக பெண் மருத்துவர் சத்தியாவும் அவரது மாமியார் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் இரயில்வே சுரங்கப் பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதை பார்த்தும் கூட எப்படியும் தண்ணீரை கடந்து விடலாம் என்ற நினைப்பில் காரை வேகமாக செலுத்தி இருக்கிறனர்.
அப்போது காரின் சைலன்சரில் தண்ணீர் புகுந்து வாகனம் நின்று விட்டது.
ஆகவே காரை விட்டு வெளியேற முடியாமல் மருமகளும், மாமியாரும் தவித்தனர். இதில் மருமகள் கார் ஓட்டிவந்ததால் சீட் பெல்ட் அணிந்து கொண்டிருந்தார்.
இதனால் அவர் காரை விட்டு உடனே வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில் மாமியார் காரின் கதவை அடித்து உதைத்து திறந்து கொண்டு நீச்சல் அடித்து உயிர் பிழைத்திருக்கிறார்.
கரைக்கு வந்த மாமியார் சொன்ன தகவலை அடுத்து அங்கு திரண்ட கிராம மக்கள் சத்யாவை மீட்க சென்றனர்.
ஆனால் காருக்குள் தண்ணிர் புகுந்ததால் அதில் மருமகள் சத்யா உயிரிழந்திருக்கிறார்.
.