பெண்களிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்

ம.பா கெஜராஜ்,

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்று  கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆம் ஆண்டு பிறந்த தினமான இன்று இத்திட்டம் தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் அதற்கான விழா நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில் மகளிர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 12000 ஆயிரம் கிடைக்கும் என்று பேசினார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் மைக் அருகில் வந்த முதல்வர் சிறு பிழை செய்து விட்டேன் ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் என்பதை இரண்டு ஆண்டுக்கு 12 ஆயிரம் என்று தவறாக பேசி விட்டேன் மன்னிக்கவும் என்று மன்னிப்பு கேட்டார்.

இன்றைய நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.