நில அதிர்வு! லேசாக இருந்ததால் பாதிப்பு இல்லை:-கலெக்டர் குமாரவேல் பாண்டியன்!சிஸ்மோகிராபிக் கருவி வேண்டும்!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
தமிழகத்தின் வேலூர் அருகே லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது
திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை தமிழ்நாட்டின் வேலூர் அருகே நில அதிர்வு பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டிஎன்எஸ்டிஎம்ஏ) படி, நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக இருந்தது.
இந்தஅதிர்வானது வேலூருக்கு மேற்கு-தென்மேற்கே 59.4 கிமீ தொலைவில் மையம் கொண்டு திருப்பத்தூர் வரை நீண்டது. திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் 25 கி.மீ ஆழத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பகுதியில் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
முன்னதாக, ஆகஸ்ட் 2021 இல், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்திற்குப் பிறகு சென்னையில் லேசான அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியதாகவும், அதன் காரணமாக வட சென்னையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்திருந்தது.
சென்னையின் திருவான்மியூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளிலும், கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து கொண்டனர்.
அக்டோபரில், கர்நாடகாவிலும் லேசான நிலநடுக்கம் பதிவானது. அக்டோபர் 11 ஆம் தேதி கலபுர்கி மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது, இந்த சம்பவத்திலும் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.
அதே மாத தொடக்கத்தில், கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள பசவகல்யாணுக்கு அருகே 2.5 முதல் 2.9 ரிக்டர் அளவில் லேசான நடுக்கம் உணரப்பட்டது. லேசான நில அதிர்வுகள் மட்டுமே ஏற்பட்டதாகவும், உயிர் மற்றும் உடைமைகள் பாதிக்கப்படவில்லை.
இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக நில அதிர்வு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பு:-நில அதிர்வு மற்றும் நில நடுக்கம் போன்றவற்றின் அளவை கணக்கிடும் சிஸ்மோ கிராபிக் கருவி வேலூரில் இதுவரை வைக்கப்படவில்லை.
வேலூரை அடுத்துள்ள அடுக்கம்பாறை, திருப்பத்தூர், குஜராத் உள்ளிட்ட பகுதிகள் ஒரே நேர் கோட்டில் இருப்பதால் நில அதிர்வின் தாக்கம் இங்கெல்லாம் அடிக்கடி இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படும் என்று சுரங்கத்துரை ஆராய்சியாளர் மாணிக்கம் என்பவர் தெரித்துள்ளார்.