வட மாவட்டங்களில் மது விற்பனையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு! ரவுடிகளை அடக்கிட சுற்றறிக்கை!

வட மாவட்டங்களில் மது விற்பனையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு! ரவுடிகளை அடக்கிட சுற்றறிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 வட மாவட்டங்களில் மது விற்பனையை கண்டறிந்து கையு நடவடிக்கை எடுத்திடவும்,  ரவுடிகளை அடக்கிட சுற்றறிக்கை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் இ.கா.ப.அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 தமிழ்நாடு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்றதும் எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டி வருகிறார்.

ரது பற்றின விவரம் வருமாறு,

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக அவ்வப்போது எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால், ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கியுள்ளனர்.

 அந்த வகையில்,  அதில் டிஎஸ்பி மற்றும் உதவி கமிஷனர்களாக உள்ளவர்கள் பகல் நேர பணியுடன் நள்ளிரவு 2 மணி வரை பணியில் இருக்க வேண்டும்.

  இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகனச் சோதனை நடத்த வேண்டும். அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும்.

 குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

 மதுவிலக்கு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். குறிப்பாக வட மாவட்டங்களில் மது விற்பனையை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 லாட்ஜ்கள், ஓட்டல்களில் சோதனை நடத்தி சரியான முகவரியை கொடுத்து தங்கியுள்ளார்களா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்ஜ் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

 டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்கக் கூடாது. காலையில் 12 மணிக்கு முன் திறக்கக் கூடாது. சில்லறை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாமல் பார் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பாருக்கு சீல் வைக்க வேண்டும் என பலவேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓரிரு நாட்களாக காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனைகளை நடத்தி பழைய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

 அதில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.