டெல்லி விரையும் அமைச்சர் துரைமுருகன்! மேகதாது மேட்டர்!

உ.சசிக்குமார்,
கர்நாடகா மாநில அரசு மேகதாது அணை கட்டும் பணியை முடுக்கிவிடும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை அவர் சந்திக்கிறார்.
அந்த வகையில் அவர் நாளை (புதன்கிழமை) மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்து பேச உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருடன் நேற்று காலை ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன் மாலை நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டிய காவிரி நீரின் அளவு மற்றும் ஜூலை மாதத்தில் திறந்து விட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து ஆலோசனை நடத்தி அது தொடர்பான ஆவணங்களுடன் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.