கிராமத்தின் மகள் திரவுபதி முர்மு:-இந்தியாவின் புதிய ஜனாதிபதி!!

கிராமத்தின் மகள் திரவுபதி முர்மு:-இந்தியாவின் புதிய ஜனாதிபதி!!

ம.பா.கெஜராஜ்,

கிராமத்தின் மகள் என்றழைக்கப்படும் ஒடிசா பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு இந்திய நாட்டின் புதிய ஜனாதிபதி ஆனார்.

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசா மாநிலம், உபர்பேடா கிராமத்தைச் சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

   எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

   ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. திரவுபதி முர்மு 2,32,400 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதன்படி திரவுபதி முர்மு - 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா- 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

   குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றியை நோக்கி பயணித்த திரௌபதி முர்மூவின் கிராமமான உபர்பேடா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கேலாராம் ஹன்ஸ்தா

 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார்.

திரௌபதி முர்மு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குழந்தைப் பருவம் இந்தத் தெருக்களில் கழிந்தது. அவருடைய வீடு இங்கு உள்ளது.

சுமார் 3500 மக்கள் வசிக்கும் உபர்பேடா கிராமம் ஒடிஷா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் குசுமி தொகுதியின் ஒரு பகுதியாகும்.

   ராய்ரங்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் முர்மு.

திரௌபதி முர்மு செய்திகளில் இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. ராய்ரங்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாகவும், ஒடிஷா அரசில் அமைச்சராகவும், ஜார்கண்ட் ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். அவரது பிறந்தவீடு உபர்பேடா மற்றும் புகுந்த வீடு பஹாட்பூர் .இந்த இரண்டுமே அவரது சட்டமன்றத் தொகுதியான ராய்ரங்பூரில் உள்ளது.

  திரௌபதி முர்மு எம்எல்ஏ ஆன பிறகு இங்கு சாலைகள் அமைக்கப்பட்டன. மின்சாரம் வந்தது. குடிநீர் குழாய்கள் போடப்பட்டன. கிராமத்திற்கு செல்லும் வழியில், கான்ஹு ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டது. கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது,"என்று உபர்பேடா கிராமத்தலைவர் கேலாராம் ஹன்ஸ்தா மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.