வாங்க பழகலாம்! பா.ஜ.க.வை குப்புற கவிழ்க்க காங்கிரசை அழைக்கும் மம்தா! அரசியல் பரபரப்பு!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இப்படித்தான் சொல்கிறார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி அமோக பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படியிருக்க காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது" என்கிறார் மம்தா.
இந்த அழைப்பை ஏற்றால் பிரதமர் வேட்பாளராக மம்தாதான் இருப்பார் என்பது அரசியல் கணக்கு ஆகும், ஏன்னா பாஜக- காங்கிரஸ் அல்லாத மாற்று கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஏற்கனவே ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
ஆக 2024 மக்களவை தேர்தலுக்கு எதிர்கட்சிகள் இப்போதே தங்கள் புஜத்தை புஷ்டியாக்கி கொள்ள தயாராகிவிட்டார்கள்.