கிராம இளைஞர் நடித்த சினிமாவை பார்க்க திரையரங்கில் குவிந்த மக்கள்!

கிராம இளைஞர் நடித்த சினிமாவை பார்க்க திரையரங்கில் குவிந்த மக்கள்!

க.பாலகுரு,

உள்ளூர் இளைஞர் நடித்த திரைப்படத்தை காண கிராம மக்கள் ஏறாளமானோர் திரண்டதால் படம் திரையிடப்பட்ட தியேட்டர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே கூடூரை சேர்ந்தவர் தீனா. தனியார் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்த கள்வன் என்கிற திரைபடம் திருவாரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தியேட்டரில்  திரையிடப்பட்டுள்ளது.

 இதையடுத்து கூடூரில் உள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தியோட்டருக்கு படம் பார்க்க ஆர்வத்துடன் திரண்டு வந்தனர்.

 இது குறித்து திரைப்பட நடிகர் தீனாவின் தந்தை மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, தீனா,சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். தற்போது வெளியான படத்தை அனைவரும் மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்து வருகின்றனர் இதுவே எனக்கு பெருமை அளிக்கிறது. படம் ரொம்ப நன்றாக உள்ளது தெரிவித்தார்.