முடிவுக்கு வந்த நடிகர் சங்க தேர்தல்! விஷால், கார்த்தி வெற்றி என அறிவிப்பு!

முடிவுக்கு வந்த நடிகர் சங்க தேர்தல்! விஷால், கார்த்தி வெற்றி என அறிவிப்பு!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 நீதிமன்ற வழக்கு இருந்தபடியால் தாமதாமாகிக்க் கொண்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

  கடந்த 2019ல் நடந்த இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசம் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

  வாக்குபதிவும் நடந்தது. ஆனால் அதை  எதிர்த்து வழக்கு தொடரப்பட்து. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

   இதனால் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

   இந்நிலையில் 'தேர்தல் செல்லாது' என தீர்ப்பு வெளியான நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.

   எனவே இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் எண்ணப்பட்டு வந்தது.

   மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தது.

   அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின.

   மேற்படி பதிவான வாக்கு எண்ணிக்கையானது நீதிமன்ற உத்தரவின் பேரில் எண்ணி முடிக்கப்பட்டது.

    இதில் பாண்டவர் அணி சார்ப்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.