உள்கட்சி பூசலால் ஆட்சி அமைக்க திணறும் பாஜக! சொல்கிறார் கெஜ்ரிவால்!

ம.பா.கெஜராஜ்,
உள்கட்சி பூசலால் ஆட்சி அமைக்க பாஜக திணறிக் கொண்டிருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கமென்ட் அடித்திருக்கிறார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி அங்கு ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், அங்குள்ள மொஹாலியில் இன்று அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் இருந்து காணொளி மூலம் கெஜ்ரிவால் எம்எல்ஏக்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் குறிப்பிடுகையில், நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிப் பெற்றாலும், கட்சிக்குள் நிலவும் பூசல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நக்கலடித்தார்.
நான்கு மாநிலங்களில் உள்ள கட்சி அணிகளில் உள்ள உட்கட்சி பூசலைக் கையாள்வதில் பாஜக தொடர்ந்து மும்முரமாக இருக்கிறது.
பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உடனடியாக பதவியேற்றனர். நேரத்தை வீணடிக்காமல் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு இயங்கத் தொடங்கிவிட்டது என்றார் அவர்.