லோடு வண்டியில் மாணவிகள்!ஆடு...மாடுகளா ஆசிரியர் சார்?

டி.முகமது இர்பான்,
சரக்கு லோடு ஏற்றிச்செல்லும் காயலான்கடை வேனில் மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களின் செயலால் பல பெற்றோர் வருத்தம் அடைந்துள்ளனர்.
நேற்று உலக தண்ணிர் தினமாம். அதை முன்னிட்டு தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்ரம்பள்ளி அருகேயுள்ள மல்லகுண்டா என்கிற பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை ஏற்றார்.
அந்த கூட்ட்டத்தில் கும்பலை சேர்த்துக்காட்ட பள்ளிக்கூட மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்துச் சென்றார்கள்.
அதற்காக மாணவிகளை லோடு வேனில் ஆடு மாடுகளைப்போல் ஏற்றிசென்றனர்.
மாணவிகளை ஏற்றிக் கொண்ட லோடு வேன் தாறுமாறாக ஓடதுவங்கியது. திருப்பதிலும் மேடு பள்ளங்களிலும் தன்னுடைய பராக்கிரமத்தை காட்டினார் ஓட்டுநர்.
இதனால் மாணவிகள் கூச்சலிட்டனர்.
இதே நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் தங்கள் கார்களில் சொகுசாக பயணித்தனராம்.
ஆஹா....!
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் சிலர் கருத்து தெரிவிக்கையில், படிக்க அனுப்பிவைத்தா, இப்படியா செய்வது. லோடு வண்டியில் எங்க புள்ளைகளை கூட்டிச்செல்வது நியாயமான செயலாக தெரியவில்லை.
ஆடு மாடுகளை கூட இது போன்ற லோடு வண்டியில் ஏற்றிசெல்லக்கூடாது என்பதற்காக பிராணிகள் வதை தடுப்பு பிரிவு உள்ளது. ஆனால் படித்த ஆசிரியர்கள் எங்க புள்ளைகளை இப்படி அழைத்துச் சென்றது ஆபத்தானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.