பொதுப் பணிதுறை அமைச்சரின் உத்தரவு! சி.எம்.சி மருத்துவமனை அருகில் சுரங்கப்பாதை! கலெக்டர் ஆய்வு!!

பொதுப் பணிதுறை அமைச்சரின் உத்தரவு! சி.எம்.சி மருத்துவமனை அருகில் சுரங்கப்பாதை! கலெக்டர் ஆய்வு!!

கு.அசோக்,

 பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலு அவர்களின் உத்தரவின் பேரில், சி.எம்.சி மருத்துவமனை அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

 வேலூர்மாவட்டம், வேலூரில் ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான சி.எம்.சி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

 இவர்கள் காந்திரோட்டில் சாலையை கடக்க நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு  அடிக்கடி ஏற்படுகிறது.

 எனவே அதனை சீர் செய்யும் வகையில் தமிழக அரசு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்துள்ளது இதற்காக இன்று மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர் இந்த நிகழ்வின் போது சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர் இதனால் சாலைக்கு அடியில் சுரங்கபாதை அமைக்க ஆய்வு செய்தோம்.

  சி.எம்.சி மருத்துவமனையுடன் பேசி சுரங்கபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் கூறியதன் பேரில் ஆய்வு செய்தோம் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசி சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.