அ.தி.மு.க. பெரிய தலையின் அடிப்படை உறுப்பினர் பதவி பறிபோகுமா?

ம.பா.கெஜராஜ்,
அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக, பின்னாளில் கருணாநிதியின் கைபிடிக்குள் அடங்கிப்போகும் சூழலுக்காக திட்டமிடப்பட்டபோது, அண்ணா இறந்துவிட, தி.மு.க.வில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார்.
சினிமாவில் மக்கள் ஆதரவு கருத்தை மையமாகக்கொண்ட கதைகளில் எம்.ஜி.ஆர் நடித்ததும், அவருக்கேற்ற பாடல் வரிகள் அமைந்த காரணத்தினாலும் அவர் மக்களை கவர்ந்திருந்தார்..
இந்நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதும், தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை 1972-ல் தொடங்கி தேர்தல் மூலமாக வெற்றி வாகைகளை சூடி வந்தவர் 1977-ல் ஆட்சியை பிடித்தார்.
எம்.ஜி.ஆர். கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். அவர் உயிரோடு இருந்த காலம் வரை எம்.ஜி.ஆர். என்ற ஒற்றை தலைமை தான் எல்லாமுமே எனலாம்.
இதனால் அ.தி.மு.க.வில் தலைமை பதவிக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆனால் 1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்ததும் கட்சியை ஆளப்போவது யார் என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது மூத்த நிர்வாகியும், எம். ஜி. ஆர் அமைச்சரவையில் சீனியர் அமைச்சராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பன் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆகவே ஜானகி அம்மாவே முதலமைச்சராகவும் அமரவைக்கப்பட்டார்.
ரிதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஜெ... கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார்.
இந்த கருத்து வேறூபாடால் கட்சி பிளவுபட்டது. ஜானகி தலைமையிலான அணி அ.தி.மு.க. (ஜா) என்றும் ஜெயலலிதா தலைமையிலான அணி அ.தி.மு.க. (ஜெ) என்றும் பிரிந்தன.
அப்போது அ.தி.மு.க.வில் 132 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள். மற்றவர்கள் ஜானகி தலைமையிலான அரசை ஆதரித்தார்கள்.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதனால் சட்டசபையில் அடிதடி, ரகளை நடந்தது. இறுதியில் வாக்கெடுப்பில் ஜானகி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டசபையில் நடந்த கலவரத்தை காரணம் காட்டி அடுத்த 4 நாட்களிலேயே ஜானகி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.
இருந்த போதும் அ.தி.மு.க. ஜா..ஜெ என இரு அணியாக செயல்பட்டார்கள்.
இந்நிலையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஜெயலலிதாவும், ஜானகியும் போட்டியிட்டனர், அவர்கள் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார்கள். ஆகவே அந்த சின்னம் முடக்கப்பட்டது.
ஆகவே ஜயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும், ஜானகி தலைமையிலான அணி இரட்டைப்புறா சின்னத்திலும் தேர்தலை சந்தித்தன.
ஆனால் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டதால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறியது.
ஆக, ஜெயலலிதா அணி 27 இடங்களையும் ஜானகி அணி இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டது.
தலைமை பதவி யாருக்கு என்கிற பிரச்சினையால் ஆட்சியை இழந்த அதிமுக பின்னர் விழித்துக் கொண்டது. ஜானகி அம்மாள் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்று ஸ்டேட்மென்ட் விடுத்தார். அதில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றும் விட்டுக்கொடுப்பதாகவும் தெரிவித்து விலகி இருந்துக் கொண்டார்.
எனவே அ.தி.மு.க. ஒரணியானது, பின்னர்ரிரட்டை இலை சின்னத்தையும் ஜெயலலிதா மீட்டார். அதன் பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். அதன் பிறகு 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா மறையும் வரை (5.12.2016) ஒற்றை தலைமை என்பது கேள்விக்குறி ஆகவில்லை என்பதெல்லாம் நடறிந்த விஷயம்.
பின்னர் உருண்டோடிய காலச்சக்கரம் 2016 ஆம் ஆண்டு ஜெ... ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சரானார். அடுத்த சில நாட்களில் கட்சியின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 2 மாதத்தில் சட்டமன்ற குழு தலைவராகவும் சசிகலா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.
கட்டாயத்தின் பேரிலேயே தான் ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தர்மயுத்தம் நடத்தினார். இதனால் அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட தொடங்கினார்கள்.
இந்நிலையில், பலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய தொடங்க, அவர்களை சசிகலா கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். இந்த சூழ்நிலையில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அணி மாறாமல் இருக்க கூவத்தூரில் விடுதியில் தங்க வைத்தனர்.
தன்னிடம் போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரினார். அதற்கான ஏற்பாடுகளும் ஆனது. ஆனால் விதி அவரை விரட்டிபிடித்து சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. ஆவே அவரது கனவு நிறைவேறவில்லை.
இருப்பினும் அவர் நிலைமையை சமாளிக்க (பன்னீருக்கு கவுன்டர்) அவர் சிறை செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராகவும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் அறிவித்து சென்றார்.
இதையடுத்து 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். சசிகலாவை விமர்சித்தார். பின்னர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இரு அணிகளும் இணைந்தனர்.
இந்நிலையில் சசிகலாவால் நீக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார்கள். 2019 ஆண்டு நவம்பரில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து 'பொதுச் செயலாளர்' என்பதற்கு பதிலாக 'ஒருங்கிணைப்பாளர்', 'இணை ஒருங்கிணைப்பாளர்'
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள்.
அதன் பிறகு சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்யும்படி சட்டசபை பரிந்துரைத்தது. (டி.டி.வி.தினகரனின் ஐடியா)
இதையடுத்து 18 உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு எதிராக டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. போட்டியிட்டது. ஆனால் அ.தி.மு.க. 12 தொகுதிகளில் வென்றது.
இதன் மூலம் ஜெயலலிதா வென்று கொடுத்துவிட்டு சென்ற ஆட்சி முழுமையாக நடத்தப்பட்டது.
இப்படி அ.தி.முக.வில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின்னர் கட்சிக்குள் கோஷ்டிகள், தலைமையை அபகரிப்பது யார் என்று உள்குத்துகள் ஏற்பட்டது. இந்த தலைமை போட்டியே திமுக வை ஆட்சி அமைக்க வழி வகுத்து கொடுத்தது எனலாம்.
அதே தான் தற்போதும் நடந்து வருகிறது. தற்போது அதிமுகவில் வெடித்துள்ள ஒற்றை தலைமை என்கிற கோஷத்துக்கு ஆரம்பத்தில் எதிராக பேசிய சி.பொன்னையன் போன்றவர்கள் கூட இன்றைய பேட்டியில் நழுவிதான் பேசினார். இப்படியே போனால் அது திமுகவுக்கு பெரிய பலமாகிவிடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆக 23ம் தேதி பொதுக் குழுவில் பெரிய தலையின் அடிப்படை உறுப்பினர் பதவியை குறிவைத்துக் கூட பிரச்சனை ஏற்படலாம் என்பதால் அக்கட்சி குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளன.
பொதுக்குழு ஆயிரம் சதவிகிதம் நடக்கும் என்று பொன்னையன் சொல்ல, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர்மானத்தில் கையெழுத்து போட்டால் தான் அது செல்லும், அதையும் மீறி ஏதாவது நடந்தால் அந்த தீர்மானம் செல்லாது என்று வைத்தியலிங்கமும் மீடியாக்கள் முன் கொக்கரித்துள்ளார்கள்.
பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறாது என்பதற்கான முன்னோட்டம் நாளைய தினம் 18.06.2022 ஆம் தேதி நடைபெறும் தீர்மானங்களை தீர்மானிக்கும் குழு கூட்டத்திலேயே தெரிந்துவிடும்.
இவ்வளவு பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் கட்சியிலிருந்து ஒதுங்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான கோவையை சேர்ந்த ஆறுக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார்.