டர்ன் ஆஃப் த கேமிரா? ஹரே யூ ஆர் நான் சென்ஸ்- பி.பி.சி. நெறியாளரிடம் முறைத்த சத்குரு!

 நன்றி பிபிசி.

ம.பா.கெஜராஜ்,

 மண்ணை காப்போம் என்கிற சுலோகத்தை ஏந்தி 27 நாடுகளுக்கு பிரச்சார பயணம் மேற்கொண்ட ஈஷா யோகா மையத்தின் உரிமையாளர் சத்குரு சமீபத்தில் இந்தியா திரும்பினார்.

   இந்நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்ட பிபிசி தமிழ் தொலைகாட்சி சத்குருவை நேர்கானல் காண நேரம் பெற்றிருந்தது.

 அதன்படி நேர்காணல் நடந்த போது பிபிசி நெரியாளரின் விணாவை எதிர்கொள்ள முடியாத சத்குரு ஹரே நான்சென்ஸ் என்றும், டர்ன் ஆஃப் த கேமிரா என்றும் உஷ்ணமானார்.

  அமைதியையும், சாந்தத்தையும் சாதாரண மக்களுக்கு வழங்கக்கூடிய இடத்தில் உள்ளதாக காட்டிக் கொள்ளும் இரு போன்றவர்கள் கோபப்படலாமா? தர்மத்தின் அடிப்படையில் எழுப்பக்கூடிய விணாவைத்தானே நெறியாளர் எழுப்பினார் என்று பலரும் புருவத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.

 பேட்டியின் ஒருபகுதியைப் பார்ப்போம்.

  சுற்றுச்சூழல் சார்ந்து அக்கறையோடு செயல்படக்கூடிய ஈஷா அறக்கட்டளை மீது அதேநேரத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றனவே. அதுபற்றிய உங்கள் கருத்து.

எவ்வளவு தடவை இதையே கேட்பீர்கள்?

சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் தான்...

உங்களுக்கு யார் சொன்னார்கள். நீங்கள் செய்தி பார்க்கிறீர்களா அல்லது அரசு துறைகள் சொல்வதைப் பார்க்கிறீர்களா, நீதிமன்றம் சொல்வதைப் பார்க்கிறீர்களா, இல்லை உங்கள் பக்கத்து வீட்டில் பாதி மூளையோடு இருக்கும் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்கிறீர்களா?

என் பதிலுக்கு..... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நாங்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பும் செய்யவில்லை, அனைத்துமே சரியாக உள்ளதாக அரசு துறைகள் சொல்கின்றன.

 சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுள்ளவர்கள், கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு முன்பே வாங்கியிருக்க வேண்டிய சுற்றுச்சூழல் அனுமதியை, கட்டிய பிறகு வாங்க ஏன் முயல வேண்டும்? முன்பே வாங்கியிருக்கலாமே?

நாட்டில் அரசாங்கம் உள்ளதா? சட்டம் உள்ளதா? அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நீங்கள் ஏன் செய்கிறீர்கள்.

இத்துடன் போதும். நிறுத்திக் கொள்ளலாம்.

ஈஷாவுடைய கடிதத்திலேயே "சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் விதிகளை மீறிவிட்டோம்" என்று குறிப்பிட்டு, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து?

(இந்தத் தருணத்தில், ரொம்பவே உஷ்ணமான சத்குரு உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..... என்று ஒரு மாதிரியாக மிரட்டி அல்லது மிரண்டு டர்ன் ஆஃப் த கேமிரா என்று பிபிசியின் கேமராவை ஆஃப் செய்யுமாறு அவரது தன்னார்வலர்களுக்கு கட்டளையிட்டார். அதனைத்தொடர்ந்து பிபிசியின் 3 கேமராக்களையும் அவர்களே கட்டாயமாக ஆஃப் செய்துவிட்டார்கள்.)

 எது எப்படியோ அவர் மீண்டும் சர்ச்சை செய்தியில் இடம்  பிடித்துவிட்டார்.