அமர்க்கலம் போங்க:- விளக்கை அனைத்து விரட்டிய மாநகராட்சி ஊழியர்கள்!

கு.அசோக்,
வேலூர் மாநகராட்சியில் நடக்கும் பகுதி சபா கூட்டங்களுக்கு உறுப்பினர்களை முன் அறிவிப்பின்றி நியமிப்பதாக கூறி அதிமுக மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் அறையை பூட்டி விளக்கை அனைத்ததால் பரபரப்பு துணை மேயர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் தமிழக அரசின் உத்தரவுப்படி நடைபெறும் நகர சபை கூட்டங்களுக்கு, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் பகுதி சபா உறுப்பினர்களை நியாமித்து அது தொடர்பான தீர்மானம் உட்பட 60 தீர்மானங்களை மாமன்ற குழு
அவசர கூட்டத்தில் விரைந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சுஜாதா கூறிவிட்டு வேகவேகமாக புறப்பட்டு சென்றார்.
இது குறித்து அதிமுக, பா.ஜ.க கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டபோதும் கூட மேயர் உரிய பதில் அளிக்காமல் 5-நிமிடங்களில் கூட்டத்தை முடித்து சென்றார்.
இதனை கண்டித்து 7- அதிமுக கவுன்சிலர்கள் 1- பாஜக கவுன்சிலர் உட்பட எட்டு கவுன்சிலர்கள் மாமன்ற கூட்ட அரங்கிற்கு உள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டத்தை தொடர்ந்து மேயர் மின்விளக்குகளை அணைக்க சொன்னதாக கூறி மாநகராட்சி ஊழியர்கள் விளக்கை அணைத்து அறையை பூட்டி சென்றனர்.பின்பு சிறிது நேரம் கழித்து அறையை திறந்து விளைக்கை போட்டனர். அதன் பின்பாக 30 நிமிடங்கள் கழித்து மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.