செய்தியாளரின் கேமிராவை பறித்து பந்தா காட்டி ஏ.டி.எஸ்.பி.!
ம.பா.கெஜராஜ்,
அனைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை படம் பிடித்த செய்தியாளரின் கேமிரா செல் போன் பறிக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி.யின் இந்த அராஜக செயலால் வாக்கு எண்ணும் மையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம்,இறைவன் காட்டு, அன்னை பாலிடெக்னிக்கில் அனைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
காலை முதல் நடைபெற்ற எண்ணிக்கையின், தேர்தல் நிலவரத்தை, அப்பகுதி தேர்தல் அலுவலரும், (ஆர்.ஓ.-) பி.டி.ஓ.வுமான கனகராஜ் அறிவிக்க முன்வரவில்லை.
இதனால் அரசியல் கட்சியினர் ஆர்.ஓ அறையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதனால் தள்ளுமுள்ளு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதனைப்பார்த்து கொதித்த ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி என்பவர் செய்தியாளரின் கேமிரா செல்போனை பறித்துகொண்டு செய்தியாளரை தாக்க பாய்ந்தார்.
ஏ.டி.எஸ்.பி.யின் இந்த அராஜக செயலால் அங்கு டென்ஷன் எகிறியது.
இதனால் போலீசார் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்களை வெளியேற்றினார்.
இவ்வளவு குழப்பத்துக்கும் பி.டி.ஓ கனகராஜ் செய்த காலதாமதம் தான் காரணம்.
இத்தனைக்கும்,மாவட்ட ஆட்சியர் 4 முறை வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க பி.டி.ஓவிடம் கூறியும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை குறிப்பிடத்தக்கது.
தன் பணியை செவ்வணே ஆற்றிய மூத்த செய்தியாளரும் மக்கள் தொலைக்காட்சின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளருமான ஜி.குலசேகரன் அவர்களை தாக்க பாய்ந்த ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி அவர்களின் அடாவடி செயல் கண்டிக்கத்தக்கது.
யாரையோ திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பந்தா காட்டுவது நியாயமற்ற செயல்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.