நாய் ஜோசியப்படி கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? தோசை சுட்ட பிரியங்கா!!

நாய் ஜோசியப்படி கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? தோசை சுட்ட பிரியங்கா!!

ம.பா.கெஜராஜ்,

நாய் ஜோசியப்படி, கர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று பரபரப்பாக பிரச்சாரம் சென்று கொண்டிருக்க, மைசூருவில் பிரியங்கா காந்தி தோசை சுட்டு வாக்களர்களை கவர்ந்தார்.

 கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்ள கர்நாடகாவுக்கு வந்து உள்ளார்.

 அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் வலம் வருகின்றனர்.

 அப்போது, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி, காலை உணவாக இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டார். 

  அவை நன்றாக இருந்தது என கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்று கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறியுள்ளார். ஓட்டலின் சமையலறை பகுதிக்கு சென்ற பிரியங்கா காந்தி, தோசை சுட்டு பழகினார்.

  ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு, அடுத்த முறை வரும்போது தனது மகளையும் அழைத்து வருவேன் என அவர்களிடம் சொல்லிவிட்டு பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டார்.

 இது ஒருபக்கம் இருக்க ம.ஜ.க. தலைவர் குமாரசாமி தான் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் என்று நாய் ஜோசியம் எடுத்துரைக்கிறது.

 மாண்டியாவில் ஒரு நாய் எதிர்காலத்தை சொல்கிறது, அது இதுவரை கூறிய கணிப்புகள் பொய்யல்ல என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

 இந்த நாயை மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் வளர்த்து வருகிறார். பைரவர் பெயரையே இந்த நாய்க்கு சூட்டியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பைரவா நாயின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த நிலையில் கோபி அடுத்த கர்நாடக முதலமைச்சர் யார் என்று பைரவா மூலம் கணிக்க திட்டமிட்டார்.

 இதற்காக பைரவா நாய்க்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்பு தற்போதைய முதலமைச்சர் பசவராஜ பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரின் புகைப்படங்களை பைரவா முன்பு வைத்த

 கோபி பைரவரிடம் இந்த முறை யார் முதல்வர் என்று கேட்கிறார்.

  உடனே எச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை நாய் வாயில் கவ்வி எடுத்தது.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக பைரவா கணிப்பு உண்மையாகி வருவதாக கூறப்படும் நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பைரவரின் கணிப்பு நிறைவேறுமா பார்போமே?