குதிரை வண்டியில் சென்று பசுமை பள்ளி திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர்! பரபரப்பு பேட்டி!!

க.பாலகுரு,
குதிரை வண்டியில் சென்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவதாக பசுமை பள்ளி திட்டத்தினை அமைச்சர் அன்பில் புய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக கொரடாச்சேரியில் பசுமை பள்ளி திட்டத்தனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பசுமை பள்ளி திட்டத்தினை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் பாசனம் முறையிலான காய்கறி தோட்டம் அமைப்பதை நேரில் பார்வையிட்டார். சிறுவகை மீன்கள் வளர்ப்பதற்கான பண்ணை குட்டையை திறந்து வைத்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டார். பின்னர் பசுமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.பின்னர்பள்ளி மாணவர்களுக்கு விவசாய வேளாண் கருவிகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஏற்பாட்டில் குதிரை வண்டியில் ஏறி உற்சாகமாக குதிரை வண்டியினை ஒட்டி சென்றார்.
பின்னர் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கொரடாச்சேரி கடை தெரு வழியாக குதிரை வண்டி சென்று கொரடாச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவதாக பசுமை பள்ளி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
பின்னர் திருவாரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முயற்சியின் பேரில் பள்ளி தோட்டம் அமைப்பதற்கான விதை தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் வேளாண்மை துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது...
பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய விவசாய பிரிவு மாணவர்கள் பயன் பெரும் வகையில் இத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் தமிழகத்தில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 500 பள்ளிகளில் இந்த திட்டத்தை கொண்டு வர போகிறோம், மேலும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமில்லாது உயர்நிலை நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் அனைவராலும் பாராட்ட பெரும் திட்டமாக அமையும் என நம்புகிறேன் என கூறினார்.
மேலும் காலை உணவு திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். 9000 ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுகிறது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேவையான அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
மேலும் மாணவர்கள் பாதிக்காத வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியர்கள் பணியமறுத்தப்பட்டு பணி செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்கவும் என தெரிவித்தார்.
இடைநீற்றல் செய்யக்கூடிய மாணவர்கள் கண்டறியப்பட்டு பள்ளியில் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள் மேலும் இடைநீற்றல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் மாணவர்கள் முன்கூட்டியே கணிக்கப்பட்டு அவர்களும் பள்ளியில் தொடர்ந்து படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு இதுகுறித்து முழு விவரங்களை அறிந்து கொண்டு பிறகு கூறுகிறேன் என்றார்
இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் .கலியபெருமாள், வருவாய் கோட்டாட்சியர் (மன்னார்குடி) கீர்த்தனா மணி, கொரடாச்சேரி ஒன்றியக்குழுத்தலைவர் உமாபரியா பாலசந்தர், ஒன்றியத்துணை பெருந்தலைவர் பாலசந்தர், கொரடாச்சேரி பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி, கல்வி புரவலர் கலைவேந்தன், முதன்மை கல்வி அலுவலர் விஜயா, இணை இயக்குநர் வே.ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.