தலைமை ஆசிரியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த வேலூர் ஆட்சியர்!

கு.அசோக்,
வேலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புகையிலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர்மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. தலைமையில் பொதுசுகாதாரத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாணவர்களிடம் புகையிலை பொருட்களை பயன்பாட்டை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டமானது நடந்தது.
இதில் பள்ளிக்கு அருகில் ஹான்ஸ் குட்கா சிகரெட் போன்ற புகையிலை போதை பொருட்கள் விற்கபட்டால் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு புகையிலையின் தீமை குறித்து விளக்கி கூறி அவர்களை புகையிலை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் பார்த்துகொள்ள வேண்டுமென விளக்கி கூறப்பட்டது.
இதில் திரளான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.