50 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்!

ஜீ.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கேதாண்டப்பட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர் .
அப்போது ஆந்திர மாநிலம் பதிவு கொண்ட லாரி அதிவேகமாக சென்றது அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 50 டன் ரேஷன் அரிசி இருப்பதை உறுதி செய்தனர்.
அதன் பிறகு நாட்டறம்பள்ளி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று லாரி பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு செர்லப்பள்ளி பகுதியை சேர்ந்த வைரப்பன் மகன் சரவணன் ( 54) என கூறினார் மேலும் இவர் குடியாத்தம் பகுதியில் இருந்து ஓசூர் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக ஒப்புக்கொண்டார் இதனையெடுத்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சரவணன் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூர் உணவு பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் முதலாளியை பிடிப்பாங்களா சார் என்று மக்கள் கேட்கிறார்கள்.