ஏலகிரி மலையில் உள்ள சேதமடைந்த அரசு தொடக்கப் பள்ளிகள்!

ஏலகிரி மலையில் உள்ள சேதமடைந்த அரசு தொடக்கப் பள்ளிகள்!

  ஜி.கே.சேகரன்,

  ஏலகிரி மலையில் உள்ள சேதமடைந்த அரசு தொடக்கப் பள்ளிகளை சரி செய்து தரக்கோரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுமார் 14 கிராமங்கள் உள்ளது.

  அதில் மங்களம், நிலாவூர், அத்தனாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மிகவும் சேதமடைந்து பள்ளி மாணவர்கள் பயில முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 மங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 49 மாணவர்கள் 42 மாணவிகள் என சுமார் 91 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

  இப்பள்ளியின் கட்டிட மேற்கூரை மழையினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் வகுப்பறைக்கு சென்று மாணவர்கள் பயில முடியாத அவல நிலை உள்ளது.

  அதேபோல் நிலாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 26 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 இப்பள்ளியின் மேற்கூரை கட்டிடம் எப்போது இடிந்து விடும் என்ற நிலையில் மிகவும் அபாயகரமாக உள்ளது.

  இதன் காரணமாக தற்போது மாணவ மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே அமர்ந்து படிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

  அதனைத் தொடர்ந்து அத்தனாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 77 மாணவர்கள் 87 மாணவிகள் என 164 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 இப்பள்ளியில் 3 கட்டிடங்கள் உள்ளன, அதில் ஒன்று மட்டும் மோல்டிங் கொட்டப்பட்டுள்ளது.

  அதுவும் மழையால் மிகவும் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பள்ளியில் பயிலும் 164 மாணவ மாணவிகளும் அருகே உள்ள சிமெண்ட் ஓடால் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் பயின்று வருகின்றனர்.

  எனவே அரசாங்கம் எதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக பள்ளி கட்டிடங்களை புணரமைத்து புதுப்பிக்க வேண்டுமென கோருகின்றனர்.

செஞ்சிடுவாங்க, செஞ்சிடுவாங்க.