அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலைமறியல்!

கு.அசோக்,
வேலூர் புதிய மீன்மார்கெட் பின்புறம் கன்சால்பேட்டை பகுதியில் மழைநீரும் கழிவுநீரும் தெருக்களில் தேங்கி நிற்பது குறித்து புகார் அளித்து பல நாட்களாகியும் அதனை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலைமறியல் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய மீன் மார்கெட் பின்புறம் உள்ள கன்சால்பேட்டை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழைநீரும் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அதனை சரி செய்யவில்லை.
இதனால் ஆவேசமடைந்த மக்கள் வேலூர் பழையபைபாஸ் சாலையில் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சீர்படுத்திடுவாங்களா?