புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை! வேலூர் டிஐஜி!

புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை! வேலூர் டிஐஜி!

 கு.அசோக்,

 வேலூரில் காவல்துறை சரக துணைதலைவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

 வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் காவல்துறை சரக துணை தலைவர் முத்துசாமி இ.கா.ப. அவர்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் குறைகளை போக்கும் வண்ணம் காலைமுதல் மாலைவரையில் குறைகளை தீர்க்க பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

  அவ்வாறு பெறப்பட்ட புகார் மனுக்களை சம்பந்தபட்ட பிரிவுக்கு அனுப்பி குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

 பொதுமக்களும் காவல்துறையில் பணியாற்றுபவர்களும் மனுக்களை அளித்து சென்றனர்.

 இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா இ.கா.ப உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.