புறநோயாளிகளுக்கு காலை மட்டுமின்றி பிற்பகலும் சிகிச்சை கொடுங்கள்! ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிவுரை

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அனைத்து மக்களுக்கும் சமமான, நேர்மையான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் தரமான சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய வகையில் வழங்குவது நமது மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் என திரு.ஜி.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அரசு முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே, மேற்கூறியவற்றை அடைவதற்கு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் வெளிநோயாளி சேவைகளை சரியான நேரத்தில் தொடங்குவது மிகவும் முக்கியமானது மற்றும் தேவைப்படும் நேரத்தில், குறிப்பாக சுகாதார சேவைகளைப் பெறுவதற்கு தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை நேரம் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையிலும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிப்புரியும் மருத்துவர்கள் (டியுட்டி டாக்டர்ஸ்) கட்டாயம் புறநோயாளிகளுக்கு பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பல் மருத்துவம் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு, புறநோயாளிகளுக்கு காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரையிலும் புறநோயாளிகளுக்கு பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு(சிஎம்ஓ-ஸ்) (நிர்வாகம்), காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரையிலும் (மற்றும்) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணிவரையிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அரசாணை(நிலை) எண்.78, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள்.14.03.2023-ன்படி 3/2/1 மருத்துவ அலுவலர்களுடன் செயல்படும் அரசு அரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகளுக்கான நேரம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரையிலும் 5 மருத்துவ அலுவலர்களுடன் செயல்படும் அரசு அரம்ப சுகாதார நிலையங்கள், புறநோயாளிகளுக்கான ஓ.பி. நேரம் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரையிலும் 2 மருத்துவ அலுவலர்களும், பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் காலை 8.00 மணிவரையிலும் (நெக்ஸ்ட் டே) 1 மருத்துவ அலுவலரும் பணியாற்றிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்ளில் பணிபுரியும் மருத்துவர் அலுவலர்கள்(மெடிக்கல் ஆபிசர்ஸ்) உரிய நேரத்திற்கு புறநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதிபடுத்திடுமாறு இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மற்றும் துணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் ஆகியோர்கள் இத்தகவலினை அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் தெரிவிப்பதுடன் அரசு முதன்மை செயலரின் உத்தரவினை பின்பற்றி செயல்படுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்,