18 ஆயிரத்தில் விதைக் கடலை இயந்திரம்:- விவசாயி சாதனை!

கு.அசோக்,
விதைக்கடலை உறிக்கும் இயந்திரத்தை ரூ.18 ஆயிரத்தில் வடிவமைத்து விவசாயி சாதனை -ஆட்கள் பற்றாக்குறையை போக்க விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும்
வேலூர் மாவட்டம், பள்ளேரியை சேர்ந்தவர் விவசாயி ராஜா இவர் ஐந்தாவது வகுப்பு வரையில் படித்து விவசாயத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
விதைக்கடலைக்காயை கையினால் தான் உறித்து கிராமங்களில் பயன்படுத்துவார்கள் 40 கிலோ கொண்ட மூட்டையை உறித்து தர ரூ.400 ஒரு ஆளுக்கு கூலியாகிறது இரண்டு பேர் உறித்தால் தான் ஒரு நாளைக்கு ஒரு மூட்டை கடலைக்காய் உறிக்க முடியும்.
மேலும் கடலைக்காய் உறிக்க ஆட்களும் தற்போது கிடைப்பதில்லை, இதனால் இவர் கடந்த ஆண்டு 2 ஏக்கருக்கு மேல் விதைக்கடலைக்காய் போட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் எளிமையான முறையில் சுமார் ரூ.18 ஆயிரம் செலவில் விதைக்கடலைக்காய் உறிக்கும் இயந்திரத்தை இவரே வடிவமைத்து தயாரித்துள்ளார்.
30 நிமிடத்தில் 40 கிலோ கொண்ட கடலைக்காயை இது உறித்து தரும் கொட்டை தனியாகவும் தோல் தனியாகவும் நீக்கி தருகிறது. ஒரே நாளில் உடனடியாக கடலைக்காயை உறித்து அப்போதே கடலைக்காயை நிலத்தில் போடும் வகையில் இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது ஆட்கள் பற்றாக்குறை என்ற பிரச்சணையை இவர் இதன் மூலம் சமாளித்துள்ளார்.
மேலும் கடலைக்காயை உடனடியாக உறித்து அப்போதே நிலத்தில் நடும் வகையில் இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இதனை விவசாயிகள் அவர்களே கூட தயாரித்து கடலைக்காயை உறித்துகொள்ளும் முறையை செய்யலாம் என்றும் கூறுகிறார்.
இவர் மழைநீரை தனது கிணற்றில் சேமிக்கிறார் இதனால் இவரின் கிணற்றிலும் நீர் இருக்கிறது மேலும் இவர் கடலைக்காய் பறிக்கும் இயந்திரம் நடுவு இயந்திரம் உள்ளிட்ட பல இயந்திரங்களை இவர் கண்டுபிடித்து அந்த பகுதி விவசாயிகளுக்கும் இதனை கற்று தருகிறார் ஐந்தாம் வகுப்பு படித்த சாதாரண விவசாயி பொறியியல் மாணவர்களுக்கு நிகராக வேளாண் கருவிகளை கண்டுபிடித்து சாதித்து வருகிறார் இவரது கண்டுபிடிப்பிற்கு விவசாயிகளிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.