இராணிப்பேட்டை ஆட்சியரின் தேர்தல் பணிகள்!

குமரேசன்,
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ம் தேதியில் மாவட்டம் முழுவதும் ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற உள்ளது.
ஏழு ஒன்றியங்களுக்கு வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சாந்தா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் நெமிலி ஒன்றியம் பணப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்கு என்னும் மையத்தின் வைக்கப்படும் வாக்குப்பொட்டிகளுக்கு பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் முககவசம் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.