ஆட்சியரின் அலட்சியத்தால் பறிபோகும் பட்டியலின மாணவர்களின் கல்வி!

ஆட்சியரின் அலட்சியத்தால் பறிபோகும் பட்டியலின மாணவர்களின் கல்வி!

பா.சுரேஷ்,

 மாவட்ட ஆட்சியரின் அலட்சியத்தால் பட்டியலின மாணவர்களின் கல்வி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகின்றன. மேற்கண்ட ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ள நிலையில் அதிக அளவு மக்கள் உள்ள ஊராட்சியாகவும் அதிலும் பட்டியலின மக்கள் 95 விழுக்காடுக்கு மேல் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில் கடந்த சில மாதங்களாக செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணி நடைபெற்றுவருகிறது.

 அதில் ஆத்தூர் இந்தியன் வங்கி அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்துடன் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 15 மீட்டர் அளவு கொண்ட காலி நிலம்லுள்ளது, ஆனால்  ஆத்தூர் அரசு நடுநிலை பள்ளிக்கு சொந்தமாக 30 சென்ட் நிலத்தை கைப்பற்றியதோடு அதில் இருந்த 2 பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இடித்து தரமட்டம் ஆக்கியதாக சொல்லப்படுகின்றன.

  ஆத்தூர் நடுநிலை பள்ளிக்கு சொந்தமான மொத்த நிலத்தின் அளவு 61 சென்ட் அதில் 30 சென்ட் நெடுஞ்சாலை துறையால் கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  அந்த பள்ளியில்  100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன.  பள்ளி கட்டிடம் போக மாணவர்கள் விளையாட விளையாட்டு மைதானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறையினரிடம் போனில் தொடர்புகொண்டு பேசியபோது மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று பள்ளி கட்டிடம் இடித்தோம். மேற்கண்ட சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதாக சொல்லி சட்டென்று போனை வைத்துவிட்டார்.

  ஆத்தூர் தொடங்கி வில்லியம்பாக்கம் வரை பல சாலை வளைவுகள் இருக்கும்போது, ஆத்தூர் ஊராட்சியை குறிவைத்து தகர்ப்பதும் பள்ளி வாசலில் பேருந்து நிலையம் அமைப்பது போன்ற செயலை செய்வது கண்டனத்திற்கு உரியது என பொது மக்கள் கொந்தளித்துள்ளனர்.

  சாலை விரிவாக்க பணிக்கு அரசுக்கு சொந்தமான போதிய இடம் தனியார் கல்வி நிறுவினத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பதை கைப்பற்றாமல், தனியார் கல்வி நிலையத்திடம் கையூட்டி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, அவசர அவசரமாக அரசு பள்ளிக்கு சொந்தமான 30 சென்ட் காலி நிலத்தை கைப்பற்றி சாலை அமைக்கும் பணி படு ஜோராக நடைபெற்று வருகின்றன.

 பட்டியலின மாணவர்களின் கல்வி சீர்குலைக்கும் விதமாக நெடுஞ்சாலை துறை தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை மெத்தன போக்கில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆளும் கட்சியும் சரி எந்த மாற்று கட்சியும் சரி இதுவரை எந்த ஒரு கண்டன குரலை எழுப்பவில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.