தேதியை சொல்லுங்க கிழமையை சொல்றேன்! குழந்தையை பார்த்து வியந்த கலெக்டர்!

கு.அசோக்,
தோட்டப்பாளையத்தை சேர்ந்த யு.கே.ஜி மாணவர் வருடத்தில், எந்த தேதியை சொன்னாலும், அதன் கிழமையை சரியாக சொல்லி ஆச்சர்யபடுத்துகிறார், இந்நிலையில் அவனை வேலூர் மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டி பட்டாடை போர்த்தினார்.
வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சங்கீத பிரியா தம்பதியரின் மகன் ரக்ஷன்.
இவன் தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறான்.
இந்த சிறுவன் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் எதாவது ஒரு மாதத்தில் ஒரு தேதியை கூறினால் உடனடியாக அந்த தேதியின் கிழமையை விரைந்து கூறுகிறான்.
இதனை அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறுவனை அழைத்து பாராட்டி அவனுக்கு சால்வை அணிவித்து சாக்லெட்டுகளை வழங்கினார்.