புதிய கட்டிடத்தை ஆய்வு நடத்திய மண்டல இயக்குநர்!ஜனவரிக்குள் பயன்பாடாம்!

புதிய கட்டிடத்தை ஆய்வு நடத்திய மண்டல இயக்குநர்!ஜனவரிக்குள் பயன்பாடாம்!

கு.அசோக்,

 சோளிங்கரில் புதிய நகராட்சி அலுவலக கட்டுமான பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு செய்தார்

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் நடைப்பெற்று வரும் 3. 50 கோடி மதிப்பீட்டில்  நகராட்சி புதிய அலுவலக கட்டிடம், மற்றும் 1.62 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டிடம், 44 லட்சம் மதிப்பீட்டில் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய கட்டிட பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் தனலட்சுமி ஆய்வு செய்தார்.

  கட்டுமான பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் பணி முடிந்த உடன்  ஜனவரி மாத இறுதிக்குள் கட்டிடங்கள் திறந்து பயண்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

 ஆய்வின் போது நகராட்சி ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் ஆசிர்வாதம், மேற்பார்வையாளர் ஆனந்தன், பணி ஆய்வாளர் மனோஜ்குமார், கவுன்சிலர்கள் சிவானந்தம், கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.