தடகள போட்டியில் வென்ற வீராங்கணைகளை பாராட்டிய ஆட்சியர்!

தடகள போட்டியில் வென்ற வீராங்கணைகளை பாராட்டிய ஆட்சியர்!

 த.நெல்சன்,

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட  ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள்  பொதுமக்களிடம்  மனுக்களை பெற்றார், மாற்றுத்திறனாளிகளிடம்  மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி  நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.

  மேலும், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைப்பெற்ற தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீராங்கணைகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட  ஆட்சித்தலைவர்  , அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.செந்தில்குமரன்,மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.சரவணன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் தடகள சங்க தலைவர் திரு.இளங்கோ, செயலாளர் திரு.ரவிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.