தீபாவளிக்கு 20 கோடி ரூபாய்க்கு துணிகள் விற்கனும்! வேலூர் கலெக்டர் டார்க்கெட்!

தீபாவளிக்கு 20 கோடி ரூபாய்க்கு துணிகள் விற்கனும்! வேலூர் கலெக்டர் டார்க்கெட்!

 கு.அசோக்,

 வேலூரில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார், அதில்  ரூ.20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாசாலையில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார்.

 இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்த கோ ஆப் டெக்ஸ் விற்பனையில் களரி காட்டன் புடவைகள், விலை உயர்ந்த பட்டு ரக சேலைகள், போர்வைகள், திரைசீலைகள், வேட்டி, சட்டைகள், என பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

  இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனையாக ரூ.20கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கூடவே 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடியும் அளிக்கபடவுள்ளது.

 அத்துடன் கோ ஆப் டெக்ஸ் நிறுவன் ஆன் லைன் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான துணிகளை விற்பனை செய்துவருகிறது.

 மேலும் கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் வட்டியில்லா கடன் விற்பனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ ஆப் டெக்ஸ் நிலையங்கள் செயல்படும் இந்த விழாவில் முதுநிலை மண்டல மேலாளர் இசக்கி முத்து விற்பனை மேலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.