ஜித்து ஜில்லாடி பாட்டுக்கு எஸ்.பி போட்ட குத்தாட்டம்!

 ர.நி.ஆனந்தன்,

  ஜித்து ஜில்லாடி கலரு கண்ணாடி என்ற பாடலுக்கு குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்டு புத்தாண்டு விழா கொண்டாடிய எஸ்பி.

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப. அவர்கள் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

   பின்னர் ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு குறித்து ரோந்து சென்ற போது பொதுமக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளோடு ஜித்து ஜில்லாடி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

  இதனால் அப்பகுதி மக்கள் எஸ்.பி பாலகிருஷ்ணனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

  மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது தற்போது குழந்தைகளிடம் குத்தாட்டம் போட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனவும் எஸ்.பி.சொன்னார்.